Tuesday, 24 September 2013

இந்தியா டுடேவில் வெளிவந்த ஒரு கட்டுரை..
பெருகி வரும் பாலியல் குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் போக்கு பொதுச்சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. பெண் அணியும் உடை சரியில்லை; அவள் சென்ற நேரம் சரியில்லை; அவள் சென்ற இடம் சரியில்லை; என்று எல்லாவற்றையும் பெண்கள் மீது பழிபோட்டுவிடுவது தவறு செய்த ஆண்களை தப்பவிடுவதற்கு சமம்.

ஒரு பக்க நீதி - பெண்களின் பாதுகாப்பு குறித்த நீதிபதி கிருபாகரனின் கருத்து


வணக்கம்.

முதலில் ஒரு வேண்டுகோள். உங்கள் கட்டுரைக்கு மறுப்பு தெரிவிப்பதால் 'ஆணாதிக்கவாதி' என்ற முத்திரை குத்திவிட வேண்டாம்.

எனக்குத் தோன்றும் சில முரண்பாடுகளை இங்கு பட்டியலிடுகிறேன். முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.

1. பாலியல் குற்றங்கள் பெருகி வரவில்லை. பெண்களை ஒரு வஸ்துவாய் மனித குலம்  பாவிக்கத் தொடங்கியது முதல் - அதாவது ஆதி காலம் முதல் - பாலியல் குற்றங்கள் என்பது தொடர்கதையாகத்தான் உள்ளது. அவை குற்றங்கள் என இனங்காணப்படுவதும், அவற்றை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதும்தான் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

2. பாதிக்கப்பட்ட பெண்களும் குற்றம் நடைபெறுவதற்கு ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக ஒருசில உண்மைகளைக் கூறினால், அதற்கு அந்த பெண்களைக் குற்றவாளிகள் என்று கூறுவதாக அர்த்தமா?
அப்படியென்றால் கட்டுக்கட்டாய் பணத்தை, பார்த்தாலே தெரிகிற மாதிரி பையில் எடுத்துக்கொண்டு, பேய்கூட உதவிக்கு வரமுடியாத நள்ளிரவில், அசட்டையாய் அலைவதில் தவறில்லையா? அந்த கோட்டை (விட்ட) சாமியை யாரும் ஒரு வார்த்தை கூட கேட்கக் கூடாதா?

(கற்பையும், பணத்தையும் ஒப்பிடுவதாக நினைக்க வேண்டாம். வேறு வழியில்லை, இந்த இரண்டுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை)

சுதந்திரத்துக்கும், பாதுகாப்பு உணர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சுதந்திரத்துக்கு முன்பு 'பெண்' என்ற வார்த்தையை சேர்த்துவிட்டால், பாதுகாப்பு உணர்வே தேவையில்லை என்று அர்த்தமில்லை.

எல்லோரும் இவ்வளவு படித்திருத்திருக்கிறீர்கள், உலகிலுள்ள எல்லா ஆண்களும் 100 சதவீதம் நல்லவர்களாக மாறுவது ஒருபோதும் சாத்தியமில்லை என்பது ஏன் யாருக்கும் புரியவில்லை.

ஆடை சுதந்திரம் ஒருபுறம் இருக்கட்டும், எல்லோரும் சுடிதார் அணிந்திருக்கும் கூட்டத்தில் ஒரே ஒரு பாவாடை தாவணிப்பெண் திரும்பிப் பார்க்க வைப்பதில்லையா?  இதுதான் கலாச்சாரம் என்ற மனதில் ஆழமாக வேரூன்றிய எண்ணங்களை க் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற வேண்டும், தாவணியிலிருந்து சுடிதாருக்கு மாறியது போல!

எனக்குத் தெரியும்.., பெண்கள் objects-ஆக பார்க்கப்படும்வரை அவர்கள் இழுத்துப் போர்த்திக்கொண்டு வீட்டுக்குள் இருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லைதான்.

இருந்தாலும் 'இந்தப் பெண் சராசரிக்கும் அப்பாற்பட்டவள்' என்கிற எண்ணத்தை உண்டாக்கும் உடைகளுடன், தவறுகள் செய்வதற்கு தைரியம் கொடுக்கும் அரவமில்லாத இரவுகளில் பெண்கள் திரிவது, பசியிலிருக்கும் பூனைமுன் பால் கிண்ணத்தை வைத்துவிட்டு, பக்கத்தில் கூட நிற்காமல் சென்று விடுவதைப் போலத்தான்.

தினம் ஆயிரக்கணக்கானவர்கள் கடந்து செல்லும் பொதுவழியில், அமைதியாகப் படுத்திருக்கும் நாய் கூட, இரவு 11:30-க்கு மேல் (வாட்ச் வைத்திருக்குமோ?) பக்கத்துத் தெரு ஆள் போனால் கூட பாதுகாப்பான தூரத்துக்கு ஓடிப்போய் பயங்கரமாய்க் குலைக்கிறதே அது ஏன்?

பாதுகாப்பு உணர்வுதான்.

பாதுகாப்பாக இருப்பதிலும், இருக்கச் சொல்வதிலும் தவறே இல்லை. உலகின் எல்லா பூனைகளையும் சைவமாகச் சொல்லி கட்டளையிடுவதைவிட அது எவ்வளவோ மேல்.

எனது இந்தக் கருத்துக்கள் எடுபடும் என்ற நம்பிக்கையில் இவற்றை எழுதவில்லை. (நீதிபதி கிருபாகரனால் முடியாததா என்னால் முடிந்துவிடப் போகிறது) சும்மா ஒரு எழுத்து (தட்டெழுத்து?) பயிற்சிக்காகத்தான்!

நன்றி.
 


Saturday, 21 July 2012

Rahul Gandhi "involved" with an Afghan princess?

Rahul Gandhi, widely seen as India’s future prime minister, may be "seriously involved" with a grand-daughter of the late Mohamed Zahir Shah, the hereditary King of Afghanistan, a local Sunday newspaper claimed today.
The Sunday Guardian said the Afghan expat community is a-twitter with this news. The young lady has not been identified by name.
"The charming Afghan princess is even reported to be a converted Christian," the weekly said.
Some informants speak of the pair "praying together on Sundays" in what they describe as a "home chapel" at the residence of Rahul’s mother Sonia Gandhi here, it added.
Rahul Gandhi, who turned 43 last week, is a bachelor. Media reports in the past have linked him with more than one foreign girlfriend.
A fourth generation scion of the Nehru-Gandhi political dynasty, he is an elected member of the Lok Sabha, Parliament’s lower house, and a general secretary of the Congress Party, which leads the ruling United Progressive Alliance (UPA).
The Sunday Guardian said: "The two [Rahul and the Afghan princess] have reportedly been seen together in the Aman Hotel in Delhi, which is known to be a regular haunt of the future PM, who spends hours there in the Fitness Center, trying to develop biceps that can challenge those of Shah Rukh Khan and Robert Vadra.
"The young lady from the Afghan royal family is known to be very well brought up, with a gentle mien and a generous nature. Hence, Rahul’s buddies hope that, this time around the future PM will not walk away from a lady friend [as he has on numerous occasions in the past], but will follow the example of Papa Rajiv [Gandhi] when he married Mamma Sonia in 1965."
The weekly went on: "The personable lady could emerge as a key asset for Rahul Gandhi as he seeks to win a fresh mandate for his battered party in 2014. She has undeniable appeal to the upwardly mobile youth vote."
The princess’s grandfather Zahir Shah had reigned for four decades from 1933 until he was dethroned in a coup in 1973 by his own cousin Mohammed Daud Khan. The king abdicated and went to Italy to live in exile. He returned to Kabul in 2002, and was given the title of Father of the Nation. He passed away in 2007 at the age of 93.
Source

Monday, 1 June 2009

ஜெனரல் மோட்டார்ஸ்: அமெரிக்காவில் திவால் நிலை - இந்தியாவில் எதிரொலிக்குமா?

ஜெனரல் மோட்டார்ஸின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவில் அந்நிறுவனம் 'சாப்டர்-11'-க்காக பதிவு செய்யவிருக்கிறது. நம்மூரில் 'மஞ்சள் கடிதாசி' என்பார்களே, கிட்டத்தட்ட அதுபோலத்தான் இதுவும்.

நொடிக்கும் நிலையிலுள்ள ஒரு நிறுவனம் மூழ்கிவிடாமல் தப்பித்துக்கொள்ள கடைசி முயற்சியாக கடன்களையும், சொத்துக்களையும் முடிந்தவரை குறைத்து தொடர்ந்த செயல்படுவதற்குத் தேவையானவற்றை செய்வதுதான் 'சாப்டர்-11'.

தனது சொந்த நாடான அமெரிக்காவிலேயே இப்படியொரு நிலைக்கு வந்துவிட்ட ஜெனரல் மோட்டார்ஸ், இந்தியாவில் எப்படி செயல்படப்போகிறது என்பதுதான் இப்போது ஜி.எம். வாடிக்கையாளர்களின் கவலை.

இருந்தாலும், "இந்திய செயல்பாடுகளில் அமெரிக்க ஜி.எம்-மின் திவால் நிலை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 'சாப்டர்-11' என்பது ஜெனரல் மோட்டார்ஸின் அமெரிக்க நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்துமே தவிர, ஜி.எம். பிராண்டை அது பலவீனப்படுத்தாது. அமெரிக்காவைப் பொருத்தவரை இதனால் ஜி.எம். மேலும் பலமடையத்தான் செய்யும்" என்கிறார் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் துணைத் தலைவர் (கார்ப்பரேட் விவகாரம்) பி. பாலேந்திரன்.

தங்களது இந்திய திட்டங்களுக்கான முதலீடுகள் எதுவும் குறைக்கப்படப்போவதில்லை என்று கூறும் ஜெனரல் மோட்டார்ஸ், இந்திய சந்தை, வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள், டீலர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு தாங்கள் அளித்துள்ள வாக்குறுதியிலிருந்து சற்றும் பின்வாங்கப்போவதில்லை என்று உறுதியாகக் கூறுகிறது.

மேலும், மூன்று வருட சர்வீஸ் போன்ற தங்களது அனைத்து திட்டங்களும் தொடரும் என்று உறுதியளித்திருப்பதுடன், 2009-ல் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

"கடந்த சில வருடங்களாக எங்களுடைய இந்திய வர்த்தகம் லாபத்தை ஈட்டி வருவதால், அது சுயசார்புடைதாகத் திகழ்கிறது. அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸின் நொடிப்பு நிலைக்கும், இந்திய வர்த்தகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை" என்கிறார் ஜி.எம் இந்தியாவின் தலைவர் கார்ல் ஸ்லைம்.

நிறுவனத்தின் தரப்பில் இப்படியெல்லாம் கூறப்பட்டாலும், நிலவரம் வேறுமாதிரி இருக்கிறது என்கிறார்கள் ஜி.எம்-மின் டீலர்கள். "ஜி.எம். பிராண்ட் மீது வாடிக்கையாளர்கள் நம்பிக்கை முன்பு மாதிரி இல்லை. எங்கள் ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை முன்புபோல் இல்லை. அவர்களிடம் கார்களை விற்பனை செய்ய படாத பாடு பட வேண்டியிருக்கிறது" என்கிறார் ஒரு ஜி.எம். டீலர்.

முடிவாக ஆட்டோமொபைல் சந்தை ஆய்வாளர்கள் கூறுவது இதுதான்: "நிறுவனத்தின் அமெரிக்க நிலைமையால் இந்திய விற்பனையில் நிச்சயம் பாதிப்பு இருக்கும் என்றாலும், அது அவ்வளவு தீவிரமாக இருக்காது. பிரச்னையை ஜி.எம் எவ்வளவு விரைவாகவும், சுமுகமாகவும் தீர்க்கப்போகிறது என்பதைப் பொருத்துதான் பாதிப்பின் தீவிரம் இருக்கும்"
- மோட்டார், ஜூன் 2009

Friday, 1 August 2008

நேனோ தொழிற்சாலைக்காக மாநிலங்கள் போட்டா போட்டி!

சிங்கூர் தொழிற்சாலையில் ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான பிரச்னைகளால் வெறுத்துப்போன ரத்தன் டாடா, பிரச்னை நீடித்தால் சிங்கூரை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்ததுதான் தாமதம், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் சிவப்புக் கம்பளம் விரித்து டாடா நிறுவனத்தை அழைக்கத் தொடங்கியிருக்கின்றன.

மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், ஒரிஸா என நேனோ கார்த் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள அழைப்பு விடுக்கும் மாநிலங்களின் பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கிறது.

ஏற்கனவே சிங்கூர் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீடு செய்திருக்கும் டாடா நிறுவனம், அங்கிருந்து தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றினால், நேனோ கார்களின் அறிமுகம் அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போகும் என்கிறது நிறுவன வட்டாரம்.

Saturday, 1 September 2007

டி.வி.எஸ் பிளேம்: 'தீ'.வி.எஸ்!

எந்த நேரத்தில் 'பிளேம்' என்று பெயர் வைத்தார்களோ, டி.வி.எஸ்-ஸின் புதிய 125 சிசி பிளேம் மோட்டார் சைக்கிள் சந்தைக்கு வருவதற்கு முன்பே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.

பார்த்தவுடனேயே, 'அழகிய தீயே' என்று சொல்ல வைக்கும் ஸ்டைலுடன் டி.வி.எஸ் வடிவமைத்திருக்கும் இந்த மாடலுடன் இன்னும் ஆறு படைப்புகளை டி.வி.எஸ் ஒரே நாளில் அறிமுகம் செய்திருந்தாலும் பஜாஜா நிறுவனத்தின் காப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் காரணமாக இந்த பிளேமின் பெயர்தான் தலைப்புச் செய்திகளில் பரபரப்பாக இடம் பெற்றது.

ஆனால் பஜாஜ் நிறுவனம் இந்த பிளேம் பைக்கைப் பார்த்து பயப்படுவதில் தவறே இல்லை. காரணம், 125 சிசி பிரிவை அப்படியே வளைத்துப் போடும் உத்தேசத்துடன் கலக்கனான அம்சங்களுடன் களமிறக்கப்பட்டிருக்கிறது இந்த டி.வி.எஸ் பிளேம்.

ஏற்கெனவே சொன்னது போல பிளேமின் தோற்றப் பொலிவு அதற்கு மிகப்பெரிய பலம். இதன் இரட்டை வண்ண வடிவமைப்பு கண்களைக் கவரக்கூடியது. ஹெட்லாம்ப், ரியர் வியூ மிர்ரர், ஷாக் அப்ஸர்பர், என்ஜின் கவுல் ஆகியவை அப்பாச்சி பைக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.

டி.வி.எஸ். நிறுவனம், நவீன ரக ஜெட் போர் விமானங்களின் 'டெல்ட்டா' வடிவ இறக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பிளேம் வடிவமைத்திருப்பதாகக் கூறுகிறது. அதனால் பைக்கின் பல அம்சங்கள் 'டெல்ட்டா எட்ஜ்' எனப்படும் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஏற்கெனவே தனது சென்ட்ரா மாடலில் விடிஐ (வேரியபில் டைமிங் இன்ஜக்ஷன்) என்ஜின்களை வடிவமைத்துப் பொருத்தியிருக்கும் டி.வி.எஸ், இந்த பைக்கில் அதைவிட அருமையான சிசி-விடிஐ என்ஜினை வடிவமைத்து பொருத்தியிருக்கிறது. மூன்று வால்வுகளைக் கொண்ட, சிசி-விடிஐ (கன்ட்ரோல்டு கம்பஷன் வேரியபில் டைமிங் இன்டலிஜென்ட்) தொழில்நுட்பத்தில் இயங்கும் என்ஜின் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் மோட்டார் சைக்கிள் இந்த பிளேம்தான்.
ஆக, சந்தையில் 'சூட்டை'க் கிளப்ப வந்திருக்கும் இந்த பிளேம், 125 சிசி பிரிவில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.

(மோட்டார், செப்டம்பர் 2007)