Friday, 1 August 2008

நேனோ தொழிற்சாலைக்காக மாநிலங்கள் போட்டா போட்டி!

சிங்கூர் தொழிற்சாலையில் ஏற்பட்டுவரும் தொடர்ச்சியான பிரச்னைகளால் வெறுத்துப்போன ரத்தன் டாடா, பிரச்னை நீடித்தால் சிங்கூரை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்ததுதான் தாமதம், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் சிவப்புக் கம்பளம் விரித்து டாடா நிறுவனத்தை அழைக்கத் தொடங்கியிருக்கின்றன.

மஹாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், ஒரிஸா என நேனோ கார்த் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள அழைப்பு விடுக்கும் மாநிலங்களின் பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கிறது.

ஏற்கனவே சிங்கூர் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீடு செய்திருக்கும் டாடா நிறுவனம், அங்கிருந்து தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றினால், நேனோ கார்களின் அறிமுகம் அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போகும் என்கிறது நிறுவன வட்டாரம்.

No comments:

Post a Comment